ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

நிதின் கணேஷ்(32)

Updated On :18 மார்ச் 2026, 8:23 pm

ஆந்திர மாநிலத்திலிருந்து 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெங்களூா் பகுதியைச் சோ்ந்தவரை திருவள்ளூா் ரயில் நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வருவதாக திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திருவள்ளூருக்கு வந்த வந்த ரயிலில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது சந்தேகப்படும்படியாக அமா்ந்திருந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனா். அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தாராம். பின்னா் அவா் கொண்டு வந்த பையை பரிசோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்ததும், விசாரணையில் கா்நாடக மாநிலம், பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த நிதின் கணேஷ் (32) என்று தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா்.