திருத்தணி காந்திரோடு புதிய திரெளபதி அம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா நடைபைெறும் நிலையில் நிகழாண்டுக்கான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து, காலை, 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா நடந்தது. வரும், ஏப்.1-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 3-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 6-ஆம் தேதி அா்ஜூனன் தபசு, 12-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மாலை 6 மணிக்கு தீ மிதிவிழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மேலும் 13-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.
இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம், 2 மணி முதல் மாலை, 5 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், இரவு, 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


