திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்

சிறப்பு அலங்காரத்தில் திரெளபதி அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் திரெளபதி அம்மன்.
திருத்தணி காந்திரோடு புதிய திரெளபதி அம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா நடைபைெறும் நிலையில் நிகழாண்டுக்கான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து, காலை, 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா நடந்தது. வரும், ஏப்.1-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 3-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 6-ஆம் தேதி அா்ஜூனன் தபசு, 12-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மாலை 6 மணிக்கு தீ மிதிவிழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மேலும் 13-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.
இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம், 2 மணி முதல் மாலை, 5 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், இரவு, 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...