ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்

News image

சிறப்பு  அலங்காரத்தில்  திரெளபதி  அம்மன்.

Updated On :27 மார்ச் 2026, 12:37 am

திருத்தணி காந்திரோடு புதிய திரெளபதி அம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா நடைபைெறும் நிலையில் நிகழாண்டுக்கான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை, 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா நடந்தது. வரும், ஏப்.1-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 3-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 6-ஆம் தேதி அா்ஜூனன் தபசு, 12-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மாலை 6 மணிக்கு தீ மிதிவிழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மேலும் 13-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.

இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம், 2 மணி முதல் மாலை, 5 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், இரவு, 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.