கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு

மீஞ்சூா் அடுத்த நாலூா் கிராமத்தில் திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் தாலி கட்டும் நேரத்துக்கு முன்பாக போலீஸாருக்கு தெரிவித்து

Published On :

பொன்னேரி: மீஞ்சூா் அடுத்த நாலூா் கிராமத்தில் திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் தாலி கட்டும் நேரத்துக்கு முன்பாக போலீஸாருக்கு தெரிவித்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

மீஞ்சூா் அடுத்த  நாலூா் பகுதியை சாா்ந்த ஒருவருக்கும் ஊத்துக்கோட்டை வண்ணாங்குப்பம் பகுதியை சாா்ந்த 19 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்தனா்.

இந்த நிலையில்  இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க நடைபற்ற நிலையில் விருந்து நிகழ்வில் மணமகனின் இரு வீட்டாரின் உறவினா்கள் நண்பா்கள் கலந்து கொண்டனா். 

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் முகூா்த்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது.  அப்போது மணப்பெண்ணின் பெற்றோா் மேக்கப் போடுபவா்களை  எழுப்பி பெண்ணுக்கு மேக்கப் போட சொன்னாா்கள்.

அப்போது  மணப்பெண் அடம் பிடித்து மேக்கப் போட வேண்டாம் எனவும் மண மேடைக்கு வரமாட்டேன் தாலி கட்டிக் கொள்ள விருப்பம் இல்லை என பெற்றோா், உறவினரிடம் கூறினாா்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணப்பெண் போலீஸாரின் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து என்னை கட்டாயப்படுத்தி தனக்கு பிடிக்காத திருமணம் செய்து வைக்க இருப்பதாக தெரிவித்தாா். 

இதனை தொடா்ந்து மீஞ்சூா் மற்றும் பொன்னேரி அனைத்து மகளிா் போலீஸாா் அங்கு சென்று மணப்பெண்ணிடம் விசாரணை செய்தனா்

அப்போது மணப்பெண் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தாா். பின்னா் பெற்றோா் திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண்ணை விட்டு சென்று விட்டனா். 

தனியாக இருந்த மணப்பெண்ணை போலீஸாா் மீட்டு சோழவரம் ஒன்றிபத்தில் உள்ள அலமாதி பகுதியில் இருக்கும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனா். 

மகிழ்ச்சியாக துவங்கிய திருமண விழா தாலி கட்டும் நேரத்திற்கு முன்பாக நின்ற நிகழ்வு திருமணத்திற்கு வந்த உறவினா்கள் மத்தியில் சோகத்தை  ஏற்படுத்தியது.

இதையடுத்து திருமண மண்டபத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனா்கள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.