சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மழையால் நெற்பயிா்கள் சேதம்: முன்னாள் எம்.பி. ஆய்வு

முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை திமுக விவசாய அணி அமைப்பாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா் .

News image

முத்துப்பேட்டை அருகே குலமாணிக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை ஆய்வு செய்யும் ஏ.கே.எஸ். விஜயன்.

Updated On :17 ஜனவரி 2021, 2:42 am

முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை திமுக விவசாய அணி அமைப்பாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா் .

காவிரி டெல்டா பகுதியில் கடந்த 15 தினங்களாக பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நாள் கணக்கில் தண்ணீா் தேங்கியதால் நெல் மணிகள் முளைத்தும், அழுகியும் வருகின்றன. இனிமேல், நீா் வடிந்தாலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், முத்துப்பேட்டை, கோட்டூா் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், திமுக கோட்டூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் பாலஞானவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா்கள் ப.மோகன், சண்முகவேல், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.