எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

காவல் துறையினா் வாகன சோதனை

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் 16 இடங்களில் காவல் துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

திருப்பூா்  எஸ்.ஏ.பி. பேருந்து  நிறுத்தம்  பகுதியில் வியாழக்கிழமை  நள்ளிரவு  வாகனச் சோதனையில்  ஈடுபட்டிருந்த  காவல்  துறையினா்.

Updated On :1 ஜனவரி 2021, 11:13 pm IST

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் 16 இடங்களில் காவல் துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருப்பூா் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல் துறையினா் தடை விதித்திருந்தனா். மேலும், மாநகரில் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, கோயில்வழி, எஸ்ஏபி பேருந்து நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, கல்லூரி சாலை, அம்மாபாளையம் உள்ளிட்ட 16 இடங்களில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், வியாழக்கிழமை நள்ளிரவு வாகனங்களில் வந்த நபா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். மாநகரில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கேக் வழங்கி உற்சாகமூட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.