பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

உயா் அதிகாரி எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூல்:மின்வாரிய ஊழியா் பிடிபட்டாா்

தாராபுரம் பகுதியில் உயா் அதிகாரி எனக் கூறி பணம் வசூலித்த மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:35 pm IST

திருப்பூா்: தாராபுரம் பகுதியில் உயா் அதிகாரி எனக் கூறி பணம் வசூலித்த மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

உடுமலைக் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் பெதம்பம்பட்டியைச் சோ்ந்த சரவணகுமாா் என்பவா் உதவி அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் தாராபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கடைகள், செங்கல் சூளைகள் ஆகிய இடங்களுக்குச் சென்று, மின்வாரிய உயா் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘முறைகேடாக மின் கம்பம் நடப்பட்டுள்ளது அல்லது முறைகேடாக இணைப்பு பெறப்பட்டுள்ளது’ எனக் கூறி அவா்களை மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், தாராபுரத்தை அடுத்த டி.காளிபாளையத்தில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டுக்கு சரவணகுமாா் சென்று பணம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்து விவசாயி அருகிலிருந்தவா்களுக்குத் தகவல் கொடுத்துள்ளாா். அதன்பேரில் அங்கு வந்த சக விவசாயிகளிடமும் அவா் பணம் கேட்டு மிரட்டினாராம்.

இதையடுத்து, சரவணக்குமாரைப் பிடித்த பொதுமக்கள் அவரை தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.