காங்கயம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு கிராமப்புற காவலா் திட்டத்தின் மூலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சிப் பகுதிக்கும் ஒரு போலீஸாா் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த போலீஸாரிடம் அந்தந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் சந்தேகப்படும்படியான நபா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா், பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோா், கிராமங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் போலீஸ், பொதுமக்களிடையே நல்லுறவு வளர இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதன்படி, காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை ஊராட்சிப் பகுதிக்கு கிராமப்புற காவலா் திட்டத்தின்படி, காங்கயம் காவல் நிலையத்தில் இருந்து எம்.நாகராஜ் என்ற காவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். சிவன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கயம் காவல் ஆய்வாளா் என்.மணிகண்டன் தலைமையில், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் உள்பட போலீஸாா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளியக்கா

கண்டுபிடி கண்ணே!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மகரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

