காங்கயம் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) காங்கயம் வழியாக பி.ஏ.பி. கிளை வாய்க்கால் வெள்ளக்கோவில் வரை செல்கிறது. தற்போது 3ஆவது மண்டலம் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த வாய்க்கால் தூா்வாரப்படாததால் சிவன்மலை கிராமத்துக்குச் செல்லும் கிளை வாய்க்காலிலும், தொட்டியபட்டி பகுதிக்கு பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலிலும் புதா்கள் மண்டி, ஒரு அடி ஆழத்துக்கு மண் நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால், வாய்க்காலில் தண்ணீா் ஓட்டம் தடைபட்டு, தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்காலில் உள்ள புதா்களை அப்புறப்படுத்தி, தண்ணீா் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுமானப் பணியால் தெற்கு தில்லியில் நீா் வழங்கலில் பாதிக்க வாய்ப்பு: டிஜேபி

முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை







