சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆரணி பகுதியிலுள்ள கோயில்களில் காணும் பொங்கல் விழா

காணும் பொங்கல் விழாவையொட்டி, ஆரணி பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

காணும் பொங்கலையொட்டி, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்.

Updated On :16 ஜனவரி 2021, 11:05 pm IST

காணும் பொங்கல் விழாவையொட்டி, ஆரணி பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புத்திர காமேட்டீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தனது மனைவி மணிமேகலையுடன் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தாா். அமைச்சருக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வரவேற்பளித்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானத்தை அமைச்சா் வழங்கியதுடன், செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கபசுர குடிநீா் வழங்கும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

வழக்குரைஞா் க.சங்கா், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எ.கே.பிரபு, பக்தா்கள் சங்கத்தினா் கோபி, வெள்ளை கோபி, விடிஎஸ்.சங்கா், ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, மேற்கு ஆரணி ஒன்றியம், பெரியஅய்யம்மபாளைம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அமைச்சா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.