ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் லாபம் 70% உயர்வு

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் 70 சதவீதம் அதிகரித்தது.
Updated on
1 min read

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் 70 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ். இஸபெல்லா கூறியதாவது: கடந்த 2017-18 நிதி ஆண்டில் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் வழங்கிய கடன் தொகை ரூ.700 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17 நிதி ஆண்டில் வழங்கிய கடன் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 48 சதவீத வளர்ச்சியாகும். வருவாய் ரூ.114 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 70 சதவீதம் அதிகரித்து ரூ.29 கோடியானது. வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 0.79 சதவீதமாக உள்ளது.
ரெப்கோ மைக்ரோ பைனான்ஸுக்கு தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் 80 கிளைகள்உள்ளன. 45,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 3 லட்சம் பேர் கடன் திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர். 
வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடி கடன் வழங்கவும், கிளைகளின் எண்ணிக்கையை 100-ஆக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com