அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மாருதியின் புதிய வேகன்ஆர் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2019, 12:58 am IST


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
மூன்றாம் தலைமுறைக்கான வேகன்ஆர் புதிய பதிப்பு ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இக்காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் பிக் நியூ வேகன்ஆர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மற்றொரு மாடலில் 1 லிட்டர் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. 
இவற்றில் ஆட்டோமேட்டிக் கியர் வசதியும் உள்ளது என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.