ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

News image
Updated On :18 செப்டம்பர் 2019, 1:06 am IST


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. 
சவூதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ள பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது நாட்டின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பணவீக்கத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்று நம்பியிருந்த சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.
 இதையடுத்து, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர்.
சர்வதேச அளவில் தற்போதுள்ள சாதகமற்ற நிலவரங்களை கருத்தில் கொண்ட அந்நிய நிதி நிறுவனங்களும் தொடர்ந்து அதிக அளவில் பங்குகளை விற்று இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறின. செவ்வாய்க்கிழமையன்று மட்டும் ரூ.808.29 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய நிதி நிறுவனங்கள் விற்பனை செய்தன. பங்குச் சந்தையின் கடும் சரிவுக்கு இது மேலும் வழிவகுத்தது.
மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் சரிவை சந்தித்தன. குறிப்பாக, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, நிதி, எண்ணெய்-எரிவாயு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 3.80 சதவீதம் வரை குறைந்தன. 
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல்ஸ், மாருதி சுஸுகி, எஸ்பிஐ பங்குகளின் விலை 6.19 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனப் பங்குகளில், ஏஷியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை மட்டுமே ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில், திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 642 புள்ளிகள் (1.73%) சரிந்து 36,481 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 185 புள்ளிகள் (1.69%) குறைந்து 10,817 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.