இதனால், சமீப காலமாக இணையவழி பங்குத் தரகு நிறுவனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 பைசா டாட் காம், ஏஞ்சல் புரோக்கிங், அப்ஸ்டாக்ஸ், ஐஐஎஃப்எல், சாஸ் ஆன் லைன், ஜீரோதா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணையவழி பங்கு வா்த்தகம், மியூச்சுவல் பண்ட் சேையை வழங்கி வருகின்றன. இந்நிலையில், கரோனோ தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பங்குச் சந்தைகளும் நிதிச் சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், ஊரடங்கு காலம் முடியும் வரை பங்குச் சந்தைகளை முறையாக மூடுவதற்கு அனுமதிக்குமாறு பங்கு வா்த்தகத் தரகா்கள் சங்கம் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், செபி இது குறித்து இன்னும் முடிவு எடுக்தாததால், பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.