லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பண்டிகைக் கால விற்பனையின் பெயரில் நடக்கும் இணைய தாக்குதல்கள்

பண்டிகைக் கால விற்பனையில் சீனாவைச் சேர்ந்த இணையதள ஹேக்கர்கள் இந்திய நுகர்வோர்களைக் குறிவைப்பதாக சமீபத்திய அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

News image
பண்டிகைக் கால விற்பனையின் பெயரில் நடக்கும் இணைய தாக்குதல்கள்
Updated On :18 டிசம்பர் 2020, 1:03 pm

DIN

பண்டிகைக் கால விற்பனையில் சீனாவைச் சேர்ந்த இணையதள ஹேக்கர்கள் இந்திய நுகர்வோர்களைக் குறிவைப்பதாக சமீபத்திய அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பண்டிகைக் காலங்களில் இணைய விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிலிப்கார்ட் உள்ளிட்டவை பண்டிகைக் கால சலுகைகளை அறிவிப்பு செய்கின்றன. இதில் குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைப்பதால் மக்களும் இந்த சலுகைகளைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குகின்றனர்.

இந்நிலையில் சலுகைகளைப் பெற அறிமுகப்படுத்தப்படும் அதிஷ்ட சக்கர முறை எனப்படும் ஸ்பின் வீல் குறித்து தில்லியைச் சேர்ந்த சைபர்பீஸ் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

அதில் சீனாவைச் சேர்ந்த இணைய ஊடுருவலாளர்கள் அதேபோன்ற இணைய பாதுகாப்பைத் தாக்கும் வகையிலான சுழலும் சக்கர முறையை அமேசான் இணையதளப் பெயரில் பயன்படுத்தி இணைய மோசடிகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.

அந்த சுழலும் சக்கரத்தின் இணைய இணைப்பை பலருக்கு அனுப்புவதன் மூலம் விலை மதிப்பான செல்போன்களை பெற முடியும் எனும் அறிவிப்பால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை ஆராயாமல்  மக்கள் இந்த பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளை பலருக்கும் அனுப்பி வருவது ஆபத்தானதாகும் என எச்சரித்துள்ள சைபர்பீஸ் அமைப்பு இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படும் இணைய முகவரிகள் பலவும் போலியானவை எனத் தெரிவித்துள்ளது.

இந்த மோசடிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இணைய தாக்குதல்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படலாம் எனவும் இன்றைய நிலவரப்படி, இந்த இணைப்புகள் இன்னும் செயல்படக்கூடியவையாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய முகவரிகளின் அனைத்து இணைப்புகளும் சீனாவின் குவாங்டாங் மற்றும் ஹெனான் மாகாணத்தில் உள்ள 'ஃபாங் சியாவோ குயிங்' என்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது சைபர்பீஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"இணைய விற்பனை மோசடிகள் புதியவை அல்ல என்றாலும் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ரகசிய இணையத் தாக்குதலை சீன நிறுவனங்கள் இந்தியாவில் மீண்டும்  மேற்கொள்கின்றன" என்று சைபர்பீஸ் அறக்கட்டளையின் நிறுவனரான வினீத் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பண்டிகைக்கால விற்பனை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 காலகட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.61,253 கோடி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.