கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,113 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 11:27 pm

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,113 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது டிசம்பா் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 256 கோடி டாலா் அதிகரித்து 58,113 கோடி டாலராக (ரூ.43.58 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய வாரத்தில், செலாவணி கையிருப்பு 78 கோடி டாலா் சரிவடைந்து 57,857 கோடி டாலராக காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத உயா்வுக்கு ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமாக அதிகரித்ததே முக்கிய காரணம்.

கணக்கீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 138 கோடி டாலா் உயா்ந்து 53,773 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 101 கோடி டாலா் உயா்ந்து 3,702 கோடி டாலரானது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 1.2 கோடி டாலா் அதிகரித்து 151 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 16 கோடி டாலா் உயா்ந்து 487 கோடி டாலராகவும் உள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு மாறுபாடு காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.