மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிளிப்கார்ட்டின் புதிய சேவை

பிளிப்கார்ட் விசாவால் இயக்கப்படும் விசா ஸேஃப் க்ளிக் (வி.எஸ்.சி) ஐ திங்களன்று அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :8 ஜனவரி 2020, 9:33 am

DIN


பிளிப்கார்ட் நிறுவனம் விசாவால் இயக்கப்படும் விசா ஸேஃப் க்ளிக் (வி.எஸ்.சி) ஐ திங்களன்று அறிமுகப்படுத்தியது. இது இ-காமர்ஸ் தளங்களில் ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) தேவையை நீக்கும். நுகர்வோருக்கு தொந்தரவு இல்லாத மற்றும் பாதுகாப்பான கட்டண செயல்முறைக்கு விஎஸ்சி பயன்படுத்தும் என்று பிளிப்கார்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஆன்லைன் வர்த்தகங்களின் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றுதான் ஓடிபி அடிப்படையிலான அங்கீகாரமாகும். இதனால் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர் பின்வாங்குவதை நாங்கள் கவனித்திருக்கிறோம் என்று பிளிப்கார்ட்டின் ஃபிண்டெக் அண்ட் பேமெண்ட்  குழுமத்தின் தலைவர் ரஞ்சித் போயனபள்ளி கூறினார்.

Story image

"வி.எஸ்.சி இந்த ஓடிபி-ஐ முழுமையான அங்கீகாரத்துடன் மாற்றியமைக்கிறது, வாடிக்கையாளர் அதிகப்படியாக சிரமம் கொள்ளத் தேவையில்லை. இந்த முயற்சியின் மூலம், சிற்சில பொருட்கள் வாங்குவோரின் இணைய வரத்து அதிகரிக்கும், அவர்கள் ஒரே கிளிக்கில் பொருட்களை வாங்கி விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று போயனபள்ளி குறிப்பிட்டார்.

எளிமைப்படுத்தப்பட்ட தீர்வுகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவை காலத்தின் தேவை என்பதை உணர்ந்த பிளிப்கார்ட் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள கடைக்காரர்களுக்கான தவணை  மற்றும் மலிவு விலையில் பொருட்களை விநியோகக் கூடிய வரம்பை அதிகரித்துள்ளது.

Story image

அடுத்து 200 மில்லியன் வாடிக்கையாளர்களை உள்நுழைவதற்கான மிகப் பெரிய குறிக்கோளுடன், தவணை வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் மலிவு விலையில் ஷாப்பிங் அனுபவத்தை தர உதவும் வகையில் பிளிப்கார்ட் பே லேட்டர் மற்றும் கார்ட்லெஸ் கிரெடிட் போன்ற சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் உள்ள விசா டெவலப்பர்கள் குழு வாடிக்கையாளர் அனுபவத்தை அதிகரிப்பதற்கும், இந்திய இ-காமர்ஸ் சந்தையில் தனித்துவமான சவால்களைச் சமாளிப்பதற்கும் வி.எஸ்.சி.யை வடிவமைத்துள்ளது. இது சிக்கலான வழிமுறைகள் மற்றும் கஷ்டமான ஒன் டைம் பாஸ்வேர்டுகளை தவிர்த்து எளிமையாக பயனாளர்களுக்குப் பிடித்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று விசா இந்தியா மற்றும் தெற்காசிய குழுமத்தின் முதன்மை மேலாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.