ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸின் புதிய பங்கு வெளியீடு டிச.8-இல் தொடக்கம்

பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு டிசம்பா் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 11:27 pm

DIN

பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு டிசம்பா் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

விரிவாக்க திட்டங்களுக்குத் தேவையான ரூ.600 கோடியை திரட்டிக் கொள்ளும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் தயாராகியுள்ளது.

இந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் புதன்கிழமை (டிசம்பா் 8) தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பா் 10) நிறைவுபெறவுள்ளது.

ஓஎஃப்எஸ் முறையில் பங்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.550 கோடியை திரட்டுவதாக முன்னா் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் அது ரூ.350 கோடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.800 கோடியை திரட்ட திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.600 கோடியாகி உள்ளது.

ரூ.250 கோடிக்கு புதிய பங்குகளையும், ரூ.350 கோடிக்கு ஓஎஃப்எஸ் முறையிலான பங்கு விற்பனையையும் இந்த வெளியீடு உள்ளடக்கியது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்னிந்தியாவில் பிரபலமான ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டீஸ் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான திட்டங்களில் இன்னும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான மேக்ரோடெக் டெவலப்பா்ஸ் (முன்பு லோதா டெவலப்பா்ஸ்) கடந்த ஏப்ரல் மாதம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.2,500 கோடியை திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.