மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வால்மார்ட், ஃபிளிப்கார்ட் இணைந்து இந்திய நிறுவனத்தில் ரூ.1100 கோடி முதலீடு

அமெரிக்காவின் வால்மார்ட் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்திய நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் ரூ.14.5 கோடியை முதலீடு செய்ய இருக்கிறார்கள்.

News image
வால்மார்ட், ஃபிளிப்கார்ட் இணைந்து இந்திய நிறுவனத்தில் ரூ.1100 கோடி முதலீடு
Updated On :14 டிசம்பர் 2021, 11:33 am

DIN

அமெரிக்காவின் வால்மார்ட் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்திய நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் ரூ.1100 கோடியை(145 மில்லியன் டாலர்) முதலீடு செய்ய இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக்கத்தில் பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிற ஃபிளிப்கார்ட் வேறு சில புதிய நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது விவசாயப் பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிற நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் வால்மார்ட்டுடன் இணைந்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் ரூ.1100 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது.

இந்தியாவில்  விவசாயிகளிடம் இருந்து மூலப் பொருள்களை வாங்கிக் கொண்டு வணிகப்படுத்தும் நிறுவனங்களில் முதன்மையான பங்களிப்பை அளித்து வரும் நிஞ்சாகார்ட் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம்.

சமீப காலங்களில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்திருப்பதாலும் நாடு முழுவதிலும் 1,800 மளிகைக் கடைகளுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தன் வணிகத்தை விரிப்படுத்த நிஞ்சாகார்ட் உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

முன்னதாக 2 முறை பிளிப்கார்ட் நிஞ்சாகார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் இம்முறை இதன் முதலீட்டு தொகை அதிகம். 

உள்ளூர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்துபவர்களுக்கு ஆதரவளிக்கும் சரியான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதிலும் நிஞ்சாகார்ட் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.