தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

3 மணி நேரத்தில் 1,800 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்: பங்குதாரர்கள் அதிர்ச்சி

பங்குச்சந்தையில் இன்று காலையில் இருந்து சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

News image

3 மணி நேரத்தில் 1,800 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்: பங்குதாரர்கள் அதிர்ச்சி

Updated On :20 டிசம்பர் 2021, 7:40 am

பங்குச்சந்தையில் இன்று காலையில் இருந்து சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

பங்குச்சந்தையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குகளின் விலை உயர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தை தொடங்கிய 3 மணி நேரத்தில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகளை இழந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

கடந்த சில வாரமாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த பங்குச்சந்தை தற்போது இமாலய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. நண்பகல் வரையிலான நிலைமை மோசமாக இருப்பதால் இன்று இந்த வீழ்ச்சியில் பெரிய மாற்றம் இருக்காது என பங்குதாரர்கள் இணையத்தில் வேதனையுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

1 மணி நிலவரம் :

கடந்த வெள்ளிக்கிழமை 57,517 புள்ளிகள் நிறைவடைந்த சென்செக்ஸ் 1774 புள்ளிகளை இழந்து தற்போது 56,234 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.