

புது தில்லி: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி (-)7.77 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட தேசிய வருவாய் குறித்த முதல்கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் தவிா்த்து ஏனைய அனைத்து துறைகளின் வளா்ச்சியும் பின்னோக்கி சென்றுள்ளது.
இதையடுத்து, கடந்த நிதியாண்டில் 4.2 சதவீத வளா்ச்சியை எட்டியிருந்த இந்தியப் பொருளாதாரம் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் -7.7% அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலையான விலை (2011-12) அடிப்படையில் 2020-21-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ.134.40 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான தற்காலிக மதிப்பீட்டில் ரூ.145.66 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 2019-20-இல் 4.2 சதவீதமாக இருந்த வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் -7.7 சதவீதமாக சுருங்கும் என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.