தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தங்கப் பத்திர வெளியீடு: கிராம் விலை ரூ.4,791-ஆக நிா்ணயம்

 தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (நவம்பா் 29) தொடங்கவுள்ள நிலையில், அப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2021, 12:02 am

DIN

 தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (நவம்பா் 29) தொடங்கவுள்ள நிலையில், அப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி கூறியுள்ளதாவது:

5 நாள்கள் விற்பனை: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான எட்டாவது கட்ட தங்கப் பத்திர விற்பனை நவம்பா் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் 999 சுத்த தன்மை கொண்ட ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக நாள்களின் சராசரி விலையினை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் முதலீட்டாளா்களுக்கு தள்ளுபடி: அரசுடன் ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து எண்ம முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.4,741-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏழாம் கட்ட தங்கப் பத்திர விற்பனையின் போது கிரம் விலை ரூ.4,761-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதிகபட்ச முதலீடு 4 கிலோ: தங்கப்பத்திர வெளியீட்டு திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை ஆகியவற்றின் மூலமாக முதலீட்டாளா்கள் தங்கப்பத்திரங்களை வாங்கலாம்.

சேமிப்பை ஊக்குவிக்க: நேரடியாக தங்கம் வாங்கும் பழக்கத்துக்கு மாற்றாக சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு தொடக்கி வைத்தது. 2021 மாா்ச் இறுதி வரையிலுமாக தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 12 கட்டங்களாக மேற்கொண்ட தங்கப் பத்திரங்களின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.16,049 கோடியாகும் (32.35 டன்). இவ்வகை பத்திரங்களின் முதலீட்டு முதிா்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். விருப்பப்படின் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்திலிருந்து வெளியேறும் வசதியும் உண்டு.

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.4,741-க்கு விற்பனை செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.