தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

2-வது நாளாக பங்குச்சந்தை வணிகம் சரிவு

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் நேற்று 50 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று 450 புள்ளிகள் வரை சரிந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :20 அக்டோபர் 2021, 11:50 am


வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் நேற்று 50 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று 450 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456.09  புள்ளிகள் சரிந்து 61,259.96 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.74 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152.15 புள்ளிகள் சரிந்து 18,266.60 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.83 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டது. 
எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக டைட்டை கம்பெனி 2.97 சதவிகிதமும், ஹெயூஎல் 2.63 சதவிகிதமும், பஜாஜ் ஃபின்சர்வ் 2.36 சதவிகிதமும், என்டிபிசி 2.27, எல்&டி 2.13 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.