தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

News image

தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி

Updated On :11 ஜனவரி 2022, 10:22 am

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

இதனால் நேற்று(ஜன.10)  60,395.63 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,342.70 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 221.26 புள்ளிகள் அதிகரித்து 60,616.89 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

18,003.30 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,997.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 52.45 புள்ளிகள் உயர்ந்து 18,055.85 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.