மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.7,500 கோடி முதலீடு செய்த கூகுள்

கூகுள் ஏர்டெல் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீண்டகால ஒப்பந்தமாக  ரூ.7,500 கோடியை முதலீடு செய்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:43 am

DIN

கூகுள் ஏர்டெல் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீண்டகால ஒப்பந்தமாக  ரூ.7,500 கோடியை(1 பில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் ரூ.7,500 கோடியை பல்வேறு திட்டங்களுக்காக முதலீடு செய்துள்ளதாகவும் ஏர்டெல் பங்குகளில் 1.28 சதவீதத்திற்கு உரிமையாளராக கூகுள் இருக்கும் என நேற்று(ஜன.27) இரண்டு நிறுவனங்களின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒரு பங்கின் விலை ரூ.734 என்கிற கணக்கில்  ரூ.5,200 கோடியை ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, 5ஜி இணையம், எதிர்காலத்தில் நெட்வொர்க் விரிவுப்படுத்தல் போன்ற திட்டங்களுக்காக கூகுள் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்துள்ளது.

மீதத் தொகையை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் சேவைகள், சலுகைகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல்,’ ஏர்டெலின் எதிர்கால  இணையம், டிஜிட்டல் தளங்கள், விநியோகம் மற்றும் கட்டண அமைப்பு ஆகியவற்றுடன், இந்தியாவின் டிஜிட்டல் அமைப்பின் எல்லையை விரிவுப்படுத்த கூகுளுடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ’இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களை அதிகரிக்க ஏர்டெலுடன் இணைந்துள்ளோம். குறிப்பாக, 5 ஜி இணையத்தின் மூலம் உருவாகும் பல புதிய தொழில்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் கூகுள் உடனிருக்கும்’ என கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

கூகுள்-ஏர்டெல் இணைந்ததால் பங்குச் சந்தையில் ஏர்டெல் பங்கின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.