ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. 

News image
Updated On :10 அக்டோபர் 2022, 9:45 am IST

வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 702.02  புள்ளிகள் உயர்ந்து 57,505.60 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.18 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 229 புள்ளிகள் உயர்ந்து 17,085.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.21 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக எச்டிஎஃப்சி பங்குகள் 2.16 சதவிகிதம் சரிந்தன. அதனைத் தொடர்ந்து ஏசியன் பெயின்ட்ஸ் 2.08 சதவிகிதமும், எச்யூஎல் 2.05 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.87 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன. 

பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே நேர்மறையாக ஏற்றத்தில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.