சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்!

இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. 
சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்!

இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. 

நேற்று(திங்கள்கிழமை) 59,288.35 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) 59,346.61 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது. 

தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் நாள் முடிவில் இறக்கத்துடன் முடிந்தன. 

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 326.23 புள்ளிகள் குறைந்து 58,962.12 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88.75 புள்ளிகள் குறைந்து 17,303.95 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஏசியன் பெயிண்ட், எம்&எம், பவர்க்ரிட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அதேநேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டிசிஎஸ், எல்டி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com