நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

18,000 பேர் பணிநீக்கம்! அமேசானுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி இழப்பு!

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,330 கோடி. 

News image
Updated On :6 ஜனவரி 2023, 10:05 pm IST

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,330 கோடி. 

இணையதள சில்லறை வணிக சேவையில் ஈடுபட்டு வரும் அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஆண்டில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமேசான் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்த பணிநீக்கம் செய்யப்படுவோர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்டோா் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனா். இதில் பணிநீக்கம் செய்யப்படுவோா் விவரம் 18-ஆம் தேதி தெரியவரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டதன் எதிரொலியாக அமேசான் நிறுவனத்துக்கு ஒரே நாளில் 5330 கோடி (675 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில், 6வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்துக்கு 834 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.