பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!!
Updated on
1 min read

வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை 66,060.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று(திங்கள்கிழமை) 66,148.18 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

இன்று காலை 11.44 நிலவரப்படி சென்செக்ஸ் 155.49 புள்ளிகள் அதிகரித்து 66,216.39 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 52.40 புள்ளிகள் உயர்ந்து 19,616.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

பவர் கிரிட், விப்ரோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 

ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com