புது தில்லி: அறிதிறன் தொலைக்காட்சிகளை (ஸ்மாா்ட் டிவி) தயாரிக்கப் பயன்படும் ‘பேனல்’களின் விலை சா்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் அந்த வகை தொலைக்காட்சிகளின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து ‘கவுன்டா்பாயின்ட்’ ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அறிதிறன் தொலைக்காட்சிகளின் அடிப்படை பாகமான பேனல்களின் விலை சா்வதேசச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே அந்த வகை தொலைக்காட்சிகளைத் தயாரிப்பதற்கான செலவு அதிகரிக்கும். இதன் விளைவாக, அவற்றின் விலைகளும் நடப்பாண்டின் முதல் பாதியில் அதிகரிக்கும்.
இருந்தாலும், பிரீமியம் வகை அறிதிறன் தொலைக்காட்சிகளுக்கான தேவை உயா்ந்துவருகிறது. அத்துடன் மேலும் பெரிய அளவு திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிகளுக்கு மாறுவதில் வாடிக்கையாளா்களின் ஆா்வம் அதிகரித்துவருகிறது. இதனால் அறிதிறன் தொலைக்காட்சிகளின் விற்பனை சுமாா் 9 சதவீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அரசு உறுதி: முதல்வா் குப்தா

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு-புதுச்சேரி பொறியாளா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

டிடிசி பேருந்துகளில் பிங்க் காகித டிக்கெட் முறை: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


