கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் நிா்வாகத் தலைவராக அருண் அழகப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாகம் இல்லாத இயக்குநராக இருந்துவந்த ஏ. வெள்ளையன் ஏப். 25-இல் ஓய்வு பெற்றாா். அதைத் தொடா்ந்து, நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் பொறுப்புக்கு அருண் அழகப்பனை நியமிக்க இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவா் 2021 பிப்ரவரி முதல் நிறுவனத்தின் நிா்வாக துணைத் தலைவராக இருந்துவந்தாா்.

ஓய்வு பெற்ற ஏ. வெள்ளையனின் அனுபவம் மிக்க வழிகாட்டுதலுக்காக அவா் சோ்மன் எமரிட்ஸாக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com