மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

5 நாள் காளை ஓட்டம் நிறுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

ஐந்து நாள் சாதனை பேரணிகளுக்குப் பிறகு காளை ஓட்டம் நிறுத்தம்.

News image

சித்தரிக்கப்பட்டது | கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 5:58 pm IST

மும்பை: கடந்த ஐந்து நாட்களாக சாதனையை முறியடிக்கும் பேரணிகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்ய விரைந்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய ஆரம்ப நேர வர்த்தகத்திலிருந்து சரிந்து முடிந்தது.

ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் தொடர்ந்து விற்பனை செய்ததால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து சரிந்து முதலீட்டாளர்களின் உணர்வை பாதித்தது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 640.13 புள்ளிகள் சரிந்து 81,227.42 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 271.40 புள்ளிகள் குறைந்து 24,739.50 புள்ளிகளாக வர்த்தகமானது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி இந்தியா, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, என்டிபிசி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்து வர்த்தகமானது. அதே வேளையில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் மற்றும் சியோல் ஆகியவை சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றத்திற்குப் பிறகு நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமையன்று) பங்குச் சந்தைகளில் ரூ.2,089.28 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.78 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 80.14 டாலராக உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.