மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ரிலையன்ஸ் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேலாக வீழ்ச்சி!

ப்ளூ சிப் நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.

News image

Reliance Industries

Updated On :5 ஆகஸ்ட் 2024, 8:45 pm IST

புதுதில்லி: ப்ளூ சிப் நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட பலவீனமான போக்கைத் தொடர்ந்து, இன்று மும்பை பங்குச் சந்தையில் 3.46 சதவிகிதம் குறைந்து ரூ.2,894.70 ஆக நிலைபெற்றது.

வர்த்தக நேர முடிவில் 4.42% குறைந்து ரூ.2,865.80 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் 3.46% குறைந்து ரூ.2,894.65 ஆக உள்ளது.

டாப் 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் 2,222.55 புள்ளிகள் சரிந்து 78,759.40 புள்ளிகளில் நிலைபெற்றது. பகல் நேர வர்த்தகத்தில் இது 2,686.09 புள்ளிகள் சரிந்து 78,295.86 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 662.10 புள்ளிகள் சரிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக, குறைந்தபட்சமான 24,055.60 புள்ளிகளுடன் நிறைவுபெற்றது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.70,195.32 கோடியாக குறைந்து ரூ.19,58,500.25 கோடி ரூபாயாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.