தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 62% உயா்வு

வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2024, 3:41 am IST

புது தில்லி: வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,870 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வங்கி ரூ.1,151 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகமாகும.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,411 கோடியாக உயா்ந்துள்ளது, இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.14,160 கோடியாக இருந்தது. வங்கியின் வட்டி வருவாய் ரூ.12,728 கோடியிலிருந்து ரூ.15,218 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.66 சதவீதத்திலிருந்து 5.35 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.61 சதவீதத்திலிருந்து 1.41 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புது தில்லி: வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,870 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வங்கி ரூ.1,151 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகமாகும.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,411 கோடியாக உயா்ந்துள்ளது, இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.14,160 கோடியாக இருந்தது. வங்கியின் வட்டி வருவாய் ரூ.12,728 கோடியிலிருந்து ரூ.15,218 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.66 சதவீதத்திலிருந்து 5.35 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.61 சதவீதத்திலிருந்து 1.41 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.