மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் உயர்வால் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து மேல்நோக்கி பயணித்து வருகிற நிலையில், நிஃப்டி 50 பங்குகள் முதல் முறையாக 24,600 புள்ளிகளை கடந்தது சாதனை படைத்தது.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2024, 5:21 pm IST

மும்பை: டெக் நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. இதை தொடர்ந்து இந்த வாரம் பல நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளன.

கடந்த சில அமர்வுகளாக இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து மேல்நோக்கி பயணித்து வருகிறது. நிஃப்டி டாப் 50 பங்குகள் ஜூலை 15ஆம் தேதியன்று முதல் முறையாக 24,600ஐ கடந்தது சாதனை படைத்தது.

டெக் துறைகளில், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிக அளவில் அன்னிய முதலீடுகள் ஈர்த்து வருவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் முடிவில் புதிய உச்சத்தில் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 145.52 புள்ளிகள் உயர்ந்து 80,664.86 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச் சந்தை 84.55 புள்ளிகள் உயர்ந்து 24,586.70 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் ஷாங்காய் உயர்ந்தும், ஹாங்காங் சரிந்தும் முடிவடைந்தது. ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) ஏற்றத்தில் முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.4,021.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 எட்டு சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 85.15 டாலராக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.