நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஐஷர் மோட்டார்ஸ்: ரூ.15 லட்சம் செலுத்த உத்தரவு!

ஹரியானா அதிகாரிகளிடமிருந்து ரூ.15 லட்சம் ஜிஎஸ்டி கேட்பு உத்தரவை பெற்றுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2024, 9:54 pm IST

புதுதில்லி: ஹரியானா அதிகாரிகளிடமிருந்து ரூ.15 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான உத்தரவை பெற்றுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஹரியானா வார்டு -5, குர்கான் கிழக்கு, கலால் மற்றும் வரிவிதிப்பு அதிகாரி அலுவலகத்திலிருந்து ஜிஎஸ்டி கோரிக்கை உத்தரவைப் பெற்றுள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான உத்தரவில் ரூ.5 லட்சம் வரியும், ரூ.9 லட்சம் வட்டியும், தலா ரூ.1 லட்சம் அபராதம் இதில் அடங்கும் என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்த அனைத்து வாய்ப்புகளையும் நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.