ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% சரிவு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், சந்தை மதிப்பில், 3 சதவிகிதம் சரிந்து, ரூ.50,205.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Reliance Industries

Published On :4 நவம்பர் 2024, 7:30 pm IST

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், சந்தை மதிப்பில் 3 சதவிகிதம் சரிந்து ரூ.50,205.1 கோடி இழப்பு ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4 சதவிகிதம் சரிந்து ரூ.1,285.10 ஆக வர்த்தகமானது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையானது 2.77% குறைந்து, ரூ.1,302 முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையிலும் 2.72 சதவிகிதம் குறைந்து ரூ.1,302.15 ஆக இருந்தது.

இந்த நிலையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.50,205.1 கோடி குறைந்து ரூ.17,61,914.95 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் பலவீனமான போக்குகளால் பங்குச் சந்தைகள் சரிந்தது முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் சரிந்து 78,782.24 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995.35 புள்ளிகளாக உள்ளது.

வர்த்தக அடிப்படையில், நிறுவனத்தின் 13.52 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யிலும் மற்றும் என்எஸ்இ-யில் 197.97 லட்சம் பங்குகள் வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.