ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் விலை - PTI

Updated On :5 ஆகஸ்ட் 2025, 9:47 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார இறுதி நாளான சனிக்கிழமை, சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. ஒரு சவரன் ரூ. 74,320 ஆக விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று, பெரிய மாற்றமின்றி சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 74,360 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,370 -க்கும் ஒரு சவரன் ரூ. 74,960 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 125 -க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,25,000 -க்கும் விற்பனையாகிறது.

Summary

The price of gold jewellery in Chennai increased by Rs. 600 per sovereign on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.