ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

ஆயிரம் பேர் பின்தொடரவில்லை என்றால், அவர்களுக்கு நேரலை அம்சம் இருக்காது

News image
இன்ஸ்டாகிராம் செயலி
Updated On :5 ஆகஸ்ட் 2025, 12:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

ஆயிரம் பேர் பின்தொடரவில்லை என்றால், அவர்களுக்கு நேரலை அம்சம் இருக்காது என அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களுக்குக்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது, 200 கோடி கணக்குகள் இன்ஸ்டாகிராமில் உள்ளன.

புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவேற்றம் செய்வதோடு மட்டுமின்றி, பலர் வணிக நோக்கத்திலும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தயாரிப்புகளை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி விடியோக்களை பதிவிடுகின்றனர்.

இதனால், இளம் தொழில் முனைவோர்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பயன்படுகிறது.

இதனிடையே, ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே நேரலை அம்சம் செயல்படும் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆயிரம் பேர் பின்தொடர்பவர்கள் இல்லாதவர்களுக்கு நேரலை அம்சம் செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்?

ஆயிரம் பேர் பின்தொடர்பவர்கள் இல்லையென்றால், நேரலை அம்சம் கிடையாது என்ற அறிவிப்புக்கு உரிய காரணத்தை இன்ஸ்டாகிராம் இதுவரை அறிவிக்கவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆதம் மொஸ்ஸெரியும் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

நேரலை விவாதத்தின் எண்ணிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

summary

Instagram Limits ‘Live’ Feature To Accounts With Over 1,000 Followers: What It Means For Users

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.