பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.
பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!
Updated on
1 min read

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.

சமீபத்திய கட்டண அறிவிப்பு காரணமாக அமெரிக்க ஏற்றுமதி வணிகத்திற்கான எதிர்பார்ப்பு குறித்து நிறுவனம் எச்சரிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புனேவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ரூ.174 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இருப்பினும், மொத்த வருமானம் முதல் காலாண்டில் ரூ.3,958 கோடியாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,158 கோடியாக இருந்தது என்று பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பாபா கல்யாணி கூறுகையில், முதல் காலாண்டில், நிறுவனம் ரூ.847 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதில் ரூ.269 கோடி பாதுகாப்புத் துறையும் அடங்கும் என்றார்.

2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பாதுகாப்பு ஆர்டர் புத்தகம் ரூ.9,463 கோடியாக இருந்தது என்றார்.

இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 1.94 சதவிகிதம் குறைந்து ரூ.1,138.80 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com