
மும்பை: வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.
இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, வட்டி விகிதத்தை ஒருமனதாக நிலைநிறுத்தி, நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. இதனால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் மாறாமல் நிலையாக இருக்கும்.
உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதே வேளையில், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிலையற்ற உள்ள உணவு விலைகள் காரணமாகும் என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
ஆர்பிஐ கடந்த மூன்று கூட்டங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பை அமலாக்கம் செய்துள்ள நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை.
ஜூன் மாதத்தில் பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் போது தெரியவரும். அதே வேளையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 6.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பு உயர்த்துவதாக அச்சுறுத்தல்களை விடுத்தும், அதிகரித்தும் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.