முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது.

News image

PTI Graphics

Updated On :6 ஆகஸ்ட் 2025, 6:39 pm IST

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது. இதற்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் 'நடுநிலை' நிலைப்பாட்டுடன் இருந்ததே முக்கிய காரணமாகும்.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, எதிர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் இந்தியா மீதான அமெரிக்க வரி ஆகியவற்றால் ரூபாயின் லாபம் கட்டுப்படுத்ப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.72 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.63 முதல் ரூ.87.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73ஆக நிறைவடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதன் இன்ட்ரா-டே அளவை மீண்டும் அடைந்து, டாலருக்கு நிகரான 22 காசுகள் சரிந்து ரூ.87.88 ஆக முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.