பங்குச்சந்தை இன்று (பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
75,672.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 11.45 மணியளவில், சென்செக்ஸ் 250.20 புள்ளிகள் குறைந்து 250.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலை வர்த்தகம் தொடங்கும் நேரத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.20 புள்ளிகள் குறைந்து 22,889.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
பொதுத்துறை வங்கிகள், மெட்டல், ஆட்டோமொபைல் துறைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் எப்எம்சிஜி நுகர்வோர் துறை இறக்கம் கண்டு வருகின்றன. ஐடிசி நிறுவனம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவைச் சந்தித்தது.
சென்செக்ஸ் பங்குகளில் மஹிந்திரா & மஹிந்திரா, ஐடிசி, மாருதி சுசுகி, எச்டிஎஃப்சி வங்கி, சொமாட்டோ, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தன.
டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம்! நிஃப்டி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


