அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.
அதானி குழுமம்
அதானி குழுமம்
Published on
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.

அட்வான்டேஜ் அசாம் முதலீட்டு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய அவர், குழும நிறுவனமான கெய்ர்ன் ஆயில் & கேஸ் ஏற்கனவே வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இரண்டு மாநிலங்களில் சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றார்.

அசாம் ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகின் மெகா படுகை ஆகும். அசாமின் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார் அகர்வால்.

அத்தகைய முதலீட்டின் மூலம் நாள் ஒன்றுக்கு 1,00,000 பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்வோம். மேலும் இப்பகுதியை ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஹைட்ரோகார்பன் மையமாக மாற்றுவோம். இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23-ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com