காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2025, 4:51 pm IST

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று மாநில அரசுக்கும் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இது தவிர, மாநில அரசுக்கும் மாதேசன் ஹைட்ரஜன் எல்விடி லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ரூ.1,500 கோடி ஹைட்ரஜன் மற்றும் நீராவி உற்பத்தி ஆலையை அமைக்க தயாராக உள்ளது. அதே வேளையில் மாநில அரசு குளோபல் ஹெல்த் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய சர்மா, மேலும் ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்றார். 'அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு' திட்டத்தின் முதல் நாளில் 15 துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் மொத்தம் 164 முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.