பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2025, 4:51 pm IST

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று மாநில அரசுக்கும் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இது தவிர, மாநில அரசுக்கும் மாதேசன் ஹைட்ரஜன் எல்விடி லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ரூ.1,500 கோடி ஹைட்ரஜன் மற்றும் நீராவி உற்பத்தி ஆலையை அமைக்க தயாராக உள்ளது. அதே வேளையில் மாநில அரசு குளோபல் ஹெல்த் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய சர்மா, மேலும் ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்றார். 'அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு' திட்டத்தின் முதல் நாளில் 15 துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் மொத்தம் 164 முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.