ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 2)ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!
Published on
Updated on
1 min read

பங்குச்சந்தை இன்று(ஜன. 2)ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. ஆண்டின் முதல் நாளான நேற்றும்(ஜன. 1) பங்குச்சந்தை உயர்ந்து காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 1.10 மணியளவில், சென்செக்ஸ் 1,134.12 புள்ளிகள் அதிகரித்து 79,641.53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 345.20 புள்ளிகள் உயர்ந்து 24,088.10 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

ஐடி, ஆட்டோமொபைல் என பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று ஏற்றம் கண்டு வருகின்றன.

பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை அதிகம் லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

இதையும் படிக்க | பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com