வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பங்குச்சந்தை ஏற்றமடைந்து வரும் நிலையில், காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 417.12 புள்ளிகள் அதிகரித்து 77,176.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148.5 புள்ளிகள் உயர்ந்து 23,398.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க | ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! புதிய உச்சம்!
எல்&டி, டைட்டன், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
சன் பார்மா, ரிலையன்ஸ், எம்&எம், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
ஐடி துறைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் உலோகத் துறை சரிந்து வருகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் நாளை(பிப். 1) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதுவும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது! ஐடி பங்குகள் 3% சரிவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


