எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ

முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆர்பிஐ புதிய விதிமுறை வெளியிட்டுள்ளது.

News image

ஆர்பிஐ - கோப்புப்படம் - File photo

Updated On :4 ஜூலை 2025, 1:07 pm IST

வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.

தனிநபர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து பெரும் கடனில் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தும்போது, கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்த விதிமுறையானது, 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஃபுளோட்டிங் ரேட் எனப்படும் மாறத் தக்க வட்டி விகிதத்தில் பெறப்படும் கடனுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனிநபர்கள், வணிக நோக்கத்துகக்க அல்லாமல் பெறும் கடன்களுக்கும், வணிக நோக்கத்துடன் தனிநபர் அல்லது சிறு தொழில் நிறவனங்கள் பெறும் கடன்களை, முன்கூட்டியே அசல் தொகையை திருப்பிச் செலுத்தும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இந்த புதிய விதிமுறையானது, வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் கடன்களுக்கும், ஏற்கனவே வாங்கி புதுப்பிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்தும்.

கடன் வழங்கும் பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிப் பணிகளை மேற்கொள்ளாத நிதி நிறுவனங்கள் என அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், ஒரு பகுதியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்தினாலும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு, வாடிக்கையாளர் எந்த நிதி ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

RBI has issued a new rule that no fee should be charged for early repayment of loans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.