மும்பை: வங்கி மற்றும் குறிப்பிட்ட ஐடி பங்குகள் முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாகவும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளாலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 270.01 புள்ளிகள் உயர்ந்து 83,712.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 61.20 புள்ளிகள் உயர்ந்து 25,522.50 புள்ளிகளாக நிலைபெற்றது. மந்தமான வர்த்தக அமர்விலும், சென்செக்ஸ் அதிகபட்சமாக 83,812.31 புள்ளிகளும், குறைந்தபட்சமாக 83,320.95 புள்ளிகளையும் எட்டியது.
சென்செக்ஸில் கோடக் மஹிந்திரா வங்கி, எடர்னல், ஆசிய பெயிண்ட்ஸ், என்டிபிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை உயர்ந்து முடிந்தன. இருப்பினும் டைட்டன் 6 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது. டிரென்ட், ஆக்சிஸ் வங்கி, மாருதி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகளும் சரிந்து முடிந்தன.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அமெரிக்கா பரஸ்பர கட்டணங்களை நிறுத்தி வைப்பதை நீட்டித்த போதிலும், முதலீட்டாளர்கள் முன்மொழியப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தகத்தில் உறுதியான முன்னேற்றத்திற்காகக் காத்திருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
கட்டண ஒப்பந்தம் குறித்து நாங்கள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். விரைவில் நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய உள்ளோம் என்றார் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவிற்குள் நுழையும் பல்வேறு நாடுகளின் தயாரிப்புகள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளை விவரிக்கும் கடிதங்களின் முதல் பகுதியை இன்று டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைத்தது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமாயின.
முதலீட்டாளர்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் உறுதியான முன்னேற்றத்திற்காக காத்திருந்ததால், இந்திய பங்குச் சந்தை பெரும்பாலும் வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தது. நிரந்தர ஒப்பந்தம் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தாலும், முறையான உறுதிப்படுத்தல் இல்லாததால் பங்குகளின் கொள்முதல் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனிடையில், முக்கிய வர்த்தக கூட்டாளிகள் மீது 25% வரிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அமெரிக்கா எடுத்த முடிவு முதலீட்டாளர்களின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய சந்தைகள் இன்று கலவையான நிலையில் வர்த்தகமாகின. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.59 சதவிகிதம் குறைந்து 69.17 அமெரிக்க டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.321.16 கோடி மதிப்புள்ள பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,853.39 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: 5 % வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை
Summary
BSE Sensex closed higher by 270 points, helped by buying in banking and select IT shares as well as positive trends in the Asian markets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

பங்குச் சந்தை மீட்சி: வங்கி பங்குகள் உயர்வு!!

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ் 941 புள்ளிகளும், நிஃப்டி 298 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி: உச்சம் தொட்ட எஃப்எம்சிஜி, வாகனத் துறை பங்குகள்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



