
புதுதில்லி: துருப்பிடிக்காத எஃகு குழாய்கள் மற்றும் குழாய்கள் உற்பத்தியாளர் ஸ்கோடா டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) வெளியீட்டு விலையான ரூ.140க்கு இணையாக பட்டியலிடப்பட்டு பிறகு 5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் மற்றும் நிஃப்டி-யில் இந்த பங்குகள் ரூ.140ல் வர்த்தகத்தைத் தொடங்கின. பிறகு நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 4.96 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.146.95 ஆகவும் என்எஸ்இ-யில் அதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.147 ஆக முடிந்தது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.880.36 கோடியாக இருந்தது. ஐபிஓ இறுதி நாளன்று ஸ்கோடா டியூப்ஸ் 53.78 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில் அதன் ஆரம்ப பங்கு விற்பனை விலை ரூ.130 முதல் ரூ.140 என குழு முடிவெடுத்தது.
ஐபிஓ மூலம் வரும் நிதியை துருப்பிடிக்காத குழாய்கள் மற்றும் குழாய்களின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கும், பணி மூலதனத் தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றது நிர்வாகம்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.