இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

News image
Updated On :6 ஜூன் 2025, 4:28 am IST

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது.

இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் கடனிருப்பு கடன் 2023-24-ஆம் நிதியாண்டின் இறுதியில் சுமாா் ரூ.27,000 கோடியாக இருந்தது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.750 கோடி கடன் அடைக்கப்பட்டது. அந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் கடன் சுமாா் ரூ.26,800 கோடியாகக் குறைந்துள்ளது.

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடனை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.